வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி. Question 1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. விடை: ரிக் யஜூர் சாம அதர்வ Question 2. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை? விடை: யானைகள் பசு வெள்ளாடு செம்மறியாடு குதிரை Question 3. ‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? விடை: இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. Question 4. ‘கற்திட்டைகள்’ என்பது என்ன? விடை: கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம் இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். Question 5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன? விடை: இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும். Question 6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக. விடை: நிஷ்கா சத்மனா (தங்கம்) ...