இ) சிறு குறிப்பு வரைக. Question 1. புதுபிக்கக் கூடிய வளங்கள். விடை: ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது. எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி Question 2. மனித வளம். விடை: இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது. எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர். Question 3. தனிநபர் வளம். விடை: தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள். Question 4. மூன்றாம் நிலை செயல்பாடுகள். விடை: உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை ஈ) மிகச் சுருக்கமாக விடையளி. Question 1. வளங்கள் என்றால் என்ன? விடை: மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும். எல்லா வளங்களுக்கும் ம...