வளங்கள்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

 

இ) சிறு குறிப்பு வரைக.

Question 1.
புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

Question 2.
மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
தனிநபர் வளம்.

விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

Question 4.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

Question 2.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

Question 3.
உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

Question 4.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

Question 1.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:




Question 2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

Question 4.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:



Question 5.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

Question 1.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும்இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.

எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

Question 2.
வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse)   (Recycle)

Question 3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

Question 4.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு
    சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Comments

Popular posts from this blog

How to create Animated 3d chart with R.

Linux/Unix Commands frequently used

R Programming Introduction