மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் -ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
Question
1.
சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
விடை:
- நன்னம்பிக்கை
- நல்லறிவு
- நற்செயல்
Question
2.
பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?
விடை:
- ஹீனயானம்
- மகாயானம்
Question 3.
‘ஜினா என்பதின் பொருள் என்ன?
விடை:
ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
Question 4.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.
விடை:
- வேதங்களின்
ஆதிக்கத்தை வெறுத்தல்.
- இரத்த
பலிகளை எதிர்த்தல்.
Question 5.
பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
விடை:
- புத்தர்
தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.
- சங்கத்தின்
உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர்.
- மிக
எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.
Question 6.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக்
குறிப்பிடுக.
விடை:
யுவான் சுவாங்
Question 7.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
விடை:
கவந்தியடிகள்
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Question 1.
பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- நல்ல
நம்பிக்கை
- நல்ல
எண்ணம்
- நல்ல
பேச்சு நல்ல செயல்
- நல்ல
வாழ்க்கை
- நல்ல
முயற்சி
- நல்ல
அறிவு
- நல்ல
தியானம்
Question 2.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
விடை:
- அகிம்சை
– எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
- சத்யா
– உண்மையை மட்டுமே பேசுதல்
- அஸ்தேய
– திருடாமை
- அபரிக்கிரகா
– பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
- பிரம்மச்சரியா
– திருமணம் செய்து கொள்ளாமை.
Question 3.
பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.
விடை:
- வாழ்க்கை
துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
- ஆசையே
துன்பங்களுக்கான காரணம்.
- ஆசையைத்
துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.
- சரியான
பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
Question
4.
பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று
வேறுபாடுகளை எழுதவும்.
விடை:
ஹீனயானம் :
- புத்தரின்
சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.
- மிக
எளிமையாக இருப்பர்.
- பிராகிருத
மொழியைப் பயன்படுத்தினர்.
மகாயானம்
:
- புத்தரின்
உருவங்களை வணங்கினர்.
- விரிவான
சடங்குகளைப் பின்பற்றினர்.
- சமஸ்கிருத
மொழியைப் பயன்படுத்தினர்.
Question 5.
சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு
சான்றுகளைத் தருக.
விடை:
சமணம் :
- அறவோர்
பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு
உள்ளது.
- கோவலனும்
கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள்
அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம்
குறிப்பிடுகிறது.
பௌத்தம் :
- சங்க
காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை
பௌத்த இலக்கியமாகும்.
- கி.பி.
ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால்
கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.
Question 1.
கர்மா – ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
விடை:
- தேவையில்
இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.
- உங்களின்
முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.
- ஒரு
மரம் நடுவோம்.
- பழைய
அலைபேசியொன்றை தானம் செய்வோம்.
- இரத்ததானம்
செய்வோம்.
- நம்மில்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.
- சுய
கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக –
மன்னிப்பு வேண்டுவோம்.
- பள்ளிக்கல்விக்குத்
தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு
வழங்குவோம்.
- தொலைபேசியில்
உரையாடும் பொழுது இனிமையாக உரையாடுவோம்.
- உணவுப்பொருள்
வாங்க வெளியே செல்கின்ற பொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது
உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.
Comments
Post a Comment