வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

 

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரிக்
  • யஜூர்
  • சாம
  • அதர்வ

Question 2.
வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
விடை:

  • யானைகள்
  • பசு
  • வெள்ளாடு
  • செம்மறியாடு
  • குதிரை

Question 3.
‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.

Question 4.
‘கற்திட்டைகள்’ என்பது என்ன?
விடை:

  • கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்
  • இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.

Question 5.
முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும்.

Question 6.
வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • நிஷ்கா
  • சத்மனா (தங்கம்)
  • கிருஷ்ணாலா (வெள்ளி)

Question 7.
தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:

  • முதுமக்கள் தாழிகள்
  • கற்திட்டைகள்
  • நினைவு கற்கள்
  • நடுகற்கள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
விடை:

  • கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
  • பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
  • தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.

Question 2.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
விடை:

  • ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
  • பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
  • குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
  • விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.
  • சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
  • பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

3. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:

  • நவீன கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது பழங்காலக் கற்றல் முறை.
  • மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
  • வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.
  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
  • இரு பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

How to create Animated 3d chart with R.

Linux/Unix Commands frequently used

R Programming Introduction