காற்று- ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2
VIII. மிகக் குறுகிய விடையளி
Question 1.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களை தருக.
விடை:
நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது
வளிமண்டலம் எனப்படும்.
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள்.
- அடி
வளி மண்ட லம் (Troposphere)
- அடுக்கு
வளி மண்ட லம் (Stratosphere)
- இடைவளி
மண்ட லம் (Mesosphere)
- அயனி
மண்ட லம் (Ionosphere)
- புறவளி
மண்ட லம் (Exosphere)
Question 2.
நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன?
விடை:
- மண்ணிலுள்ள
காற்று இடைவெளிகளில் ஆக்ஸிஜன் உள்ளது.
- இந்த
ஆக்ஸிஜன் வேர்நுனி மூடிகளின் வழியாகப் பரவல் முறையில் தாவரத்தின்
பிறபாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
Question 3.
ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
விடை:
- கம்பளி
(அல்லது) ஈரச்சாக்கு கொண்டு தீயினை முழுவதும் மூட வேண்டும்.
- பின்பு
தரையில் உருட்ட வேண்டும்.
- ஏனெனில்
பொருட்கள் எரிவதற்கு ஆக்சிஜன் (O2) தேவை. இவ்வாறு செய்யும் போது எரிவதற்கு
வேண்டிய O2 இல்லாது போக தீ அணைந்து விடுகின்றது. தகுந்த தீயணைப்பானைப்
பயன்படுத்துவதும் மிகச்சிறந்தது.
Question 4.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நிகழும் ?
விடை:
பல சுகாதார நிலைமைகள் மற்றும் ஆபத்து காரணிகள் வாய் வழி சுவாசித்தலினால்
ஏற்படக்கூடும்.
- குறட்டை
- உலர்ந்தவாய்
- நாள்பட்ட
சோர்வு
- பல்
ஆரோக்கியக் குறைவு.
IX. குறுகிய விடையளி
Question 1.
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை
இழக்கிறது? ஏன்?
விடை:
மழைக்காலங்களில் காற்றில் அதிகமான ஈரப்பதம் காணப்படும். இதனால் பிஸ்கட் தனது
மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது.
Question 2.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
விடை:
- வாகனங்களிலிருந்து
வெளியேறும் புகையில் மாசுக்கள் கலந்துள்ளன. இந்த மாசு நிறைந்த காற்றினை
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் சுவாசிக்க நேர்ந்தால் சுவாசம் மற்றும்
நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
- இவற்றை
தடுப்பதற்காக போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிகின்றனர்.
X. விரிவான விடையளி:
Question 1.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு இவற்றின் இடையே
உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
விடை:
- தாவரங்கள்
ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஆக்ஸிஜனை விலங்கினங்கள் தங்கள்
சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன.
- தாவரங்கள்
சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை
ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
- இந்த
ஆக்ஸிஜனை, விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்டு CO2யை
வெளியேற்றுகின்றன.
- இவ்வாறு
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் (O2) மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) சமநிலை,
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம் மூலமும், தாவரங்களின் ஒளிச் சேர்க்கை
மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
Question 2.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
விடை:
- உயிரினங்கள்
அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான தனிமமான ஆக்ஸிஜன்
வளிமண்டலத்தில் (காற்றில்) உள்ளது.
- சூரியனிடமிருந்து
வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சுகள் புவியின் மேற்பரப்பிற்கு
வருவதை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் தடுக்கின்றது.
- புவியில்
தகுந்த வெப்பநிலை இருக்கக் காரணம் வளிமண்டலமே, இதன் காரணமாகவே புவியில்
உயிரினங்கள் வாழ முடிகிறது.
- வளிமண்டலத்தில்
உள்ள நீராவி, நம் சுற்றுப் புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
Comments
Post a Comment